Aug 18, 2010

என்னைத் தருவாய் என்னிடம்?!

வானக்குளத்தில் உள்ள நட்சத்திரப் பூக்கள் தரவா?

மேக ஆடையில் மறைந்திருக்கும் மென்மதியாள் தரவா?

கடலில் கரையப்போகும் மாலை சூரியன் தரவா? – அல்லது

எழப்போகும் வைகறை சூரியன் தரவா?

மலை போட்டிருக்கும் பச்சை ஆடை தரவா?

மார்கழி மாத பனி மூட்டம் தரவா?

உலகத்து செடிகொடிகள் மொட்டெல்லாம் தரவா? – அதையே

மலரச்செய்து மணத்தோடு தரவா?

எதைத் தந்தால்.. எதைத் தந்தால் –

என்னைத் தருவாய் என்னிடம்?

எப்படி வந்தாய்… எப்படி கவர்ந்தாய்..

நானில்லையே என்னிடம்!

No comments: