Jan 24, 2011

அம்மாவுக்கு…

நீ நிலாச்சோறு ஊட்டிய நினைவுகளில்லை,

       உன் நெஞ்சில் என் நித்திரையும் நினைவில்லை..

நின் மடி தூக்கமது நினைவில்லை,

       உன் இடுப்புச் சவாரியும் நினைவில்லை..

அழும்போது ஆற்றுவாயே அது நினைவில்லை,

       அடித்தபின் அணைப்பாயே அதுவும் நினைவில்லை..

எல்லாம் எல்லாம் நினைக்கும்போது

        மீண்டும் ஒருமுறை குழந்தையாகி,

நிந்தன் மடியில் இடமும் வாங்கி

        நினைவுகளை சேமிக்க நினைக்கின்றேன்…!

No comments: